close
Choose your channels

தாய், தந்தை உள்பட 11 பேர் மீது விஜய் வழக்கு!

Sunday, September 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தனது தாய், தந்தை உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்ஏ சந்திரசேகர், பொருளாளராக ஷோபா மற்றும் தலைவராக பத்மநாபன் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் விஜய் தரப்பிலிருந்து இதற்கு மறுப்புத் அறிவிக்கப்பட்டதோடு தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் விஜய் வழக்கு தொடர்ந்தார். சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சந்திரசேகர், ஷோபா தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் விஜய் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாததால் இந்த வழக்கை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். தந்தை தாய் உள்பட 11 பேர் மீது தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.