close
Choose your channels

'பிகில்' படப்பிடிப்பு நிறைவு நாளில் விஜய் செய்த பொன்னான விஷயம்!

Wednesday, August 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது. இந்த காட்சிகளுடன் விஜய்யின் படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்தது. இதனை அடுத்து 'பிகில்' படக்குழுவினர் அனைவரையும் விஜய் வழக்கம்போல் கௌரவித்தார்

ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும் நாளில் விஜய் தனது கையால் படக்குழுவினர் அனைவருக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்குவதை வழக்கமாக கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நேற்று 'பிகில்' படப்பிடிப்பு முடிந்தவுடன் சுமார் 400 பேர்களுக்கு தனது கையால் தங்க மோதிரம் பரிசு அளித்து படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விஜய்யிடம் இருந்து மோதிரம் பெற்ற அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது 'சுமார் 400 பேர்களுக்கு பொறுமையுடன் தனது கையால் தங்க மோதிரத்தை வழங்கி கெள்ரவித்தது தளபதியின் குணத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதைவிட அவருக்கு பெருமை சேர்க்கும் விஷயம் வேறு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.