சிம்புவுக்கு தானாக முன்வந்து உதவிய விஜய்

  • IndiaGlitz, [Monday,July 27 2015]

இளையதளபதி விஜய் சத்தமில்லாமல் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர் என்பது பல உதாரணங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது வந்த புதிய தகவலின்படி சிம்புவின் வாலு படம் ரிலீஸ் ஆக விஜய் தானாக முன்வந்து உதவி செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

சிம்புவின் 'வாலு' திரைப்படம் பல தடைகளை தாண்டி வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் மொத்த விநியோக உரிமையை தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடமிருந்து வாங்கிய டி.ராஜேந்தர், சில பகுதிகளில் மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்றுவருகிறார். இந்நிலையில் கோவை மற்றும் திருச்சி நகரங்களில் வாலு' விநியோக உரிமையை காஸ்மாஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவா என்பவர் வாங்கியிருக்கிறார். இவர் வழக்கமாக விஜய் படங்களை விநியோகிப்பவர். .இந்தத் தகவல் விஜய் காதுக்கு போனவுடன் அவர் உடனடியாக சிவாவை அழைத்து 'வாலு' படம் எந்தப் பிரச்சனையுமில்லாமல் வெளியாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய்யின் 'தலைவா' திரைப்படம் பிரச்சனையில் சிக்கியபோது, விஜய்க்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தவர் சிம்புஎன்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு ஒரு தீவிர அஜீத் ரசிகர் என்றும் அனைவருக்கும் தெரிந்த நிலையில் விஜய்தானாகவே முன்வந்து பெரிய மனதுடன் உதவி செய்திருப்பதை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில்வரவேற்றுள்ளனர்.

More News

அரண்மனை 2, தூங்காவனம்: த்ரிஷாவின் 50வது படம் எது?

கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடித்த 'மெளனம் பேசியதே' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை த்ரிஷா கடந்த 13 வருடங்களாக கோலிவுட்டில் வெற்றி நாயகியாக...

பேய்ப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள 'வீரம்' நடிகை

சிவகார்த்திகேயனுடன் 'எதிர்நீச்சல்' மற்றும் அஜீத் நடித்த 'வீரம்' ஆகிய படங்களில் நடித்த நடிகை சுஜாகுமார் தற்போது ஒரு புதிய பேய்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி' என்ற வைக்கப்பட்டுள்ளது.......

காதல் தோல்விக்காக இனியா ஆடிய லுங்கி டான்ஸ்

வாகை சூடவா படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் மெளனகுரு, சென்னையில் ஓர் நாள் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை இனியா, தற்போது 'கரையோரம்' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.....

'பாகுபலி' படக்குழுவினர்களை பாராட்டிய பாரத பிரதமர்

உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வரும் 'பாகுபலி' திரைப்படத்திற்கு இதுவரை ரசிகர்கள் மற்றும் திரையுலக விஐபிகளிடம் இருந்து பாராட்டுக்களை கிடைத்து வந்தது. ......

சிவகாமி ரம்யாகிருஷ்ணனுக்கு நேர்ந்த கஷ்டமான அனுபவம்

தென்னிந்திய திரைப்படமான பாகுபலி முதன்முதலாக ரூ.400 கோடி வசூலை தாண்டி ரூ.500 கோடியை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் படமாக மாறியுள்ளது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும், இந்த படத்தில் பணியாற்றியதில் பெருமைப்படுவதாக கூறி வருகின்றனர். .....