close
Choose your channels

விபத்தில் மறைந்த ரசிகரின் குடும்பத்திற்கு தளபதி செய்த மகத்தான உதவி!

Monday, February 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தங்கள் படங்களின் புரமோஷனுக்கு மட்டும் ரசிகர்களை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு இரசிகர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் நடிகர்கள் மத்தியில் தளபதி விஜய் மட்டுமே ரசிகர்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளும் ஒரே நடிகர் என்பது திரையுலக வட்டாரங்கள் கூறும் ஒரு தகவலாகும்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய் அறிந்துள்ளார்.

இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு விஜய் ரூபாய் 50,000 நிதி உதவி செய்துள்ளதாகவும் மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை தாராளமாக அணுகலாம் என்றும் அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய் கொடுத்த ரூ 50 ஆயிரத்தை விஜய் ரசிகர் மன்றத்தினர் மரணமடைந்த முருகனின் மனைவி மற்றும் மகன்களிடம் கொடுத்தனர். விஜய் செய்த இந்த மகத்தான உதவிக்கு முருகனின் மனைவி மற்றும் மகன்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.