விபத்தில் மறைந்த ரசிகரின் குடும்பத்திற்கு தளபதி செய்த மகத்தான உதவி!

  • IndiaGlitz, [Monday,February 17 2020]

தங்கள் படங்களின் புரமோஷனுக்கு மட்டும் ரசிகர்களை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு இரசிகர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் நடிகர்கள் மத்தியில் தளபதி விஜய் மட்டுமே ரசிகர்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளும் ஒரே நடிகர் என்பது திரையுலக வட்டாரங்கள் கூறும் ஒரு தகவலாகும்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய் அறிந்துள்ளார்.

இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு விஜய் ரூபாய் 50,000 நிதி உதவி செய்துள்ளதாகவும் மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை தாராளமாக அணுகலாம் என்றும் அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய் கொடுத்த ரூ 50 ஆயிரத்தை விஜய் ரசிகர் மன்றத்தினர் மரணமடைந்த முருகனின் மனைவி மற்றும் மகன்களிடம் கொடுத்தனர். விஜய் செய்த இந்த மகத்தான உதவிக்கு முருகனின் மனைவி மற்றும் மகன்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

More News

மாஸ்டருக்கு பின் விஜய்சேதுபதியிடம் ஏற்படும் மாற்றம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருவது தெரிந்ததே. இந்த படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட

குட்டிக் கதையை பாராட்டிய சிம்புவுக்கு நன்றி கூறிய பிரபல இயக்குனர்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஒரு குட்டி கதை' என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

புன்னகை மன்னன் கமல்-ரேகா பாணியில் தற்கொலை செய்த நிஜ காதல் ஜோடி: மைசூர் அருகே பரபரப்பு 

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், ரேவதி, ரேகா நடித்த 'புன்னகை மன்னன்' திரைப்படத்தில் கமல்-ரேகா காதல் ஜோடி, நாள் முழுவதும் சந்தோஷமாக இருந்து விட்டு அதன் பின்னர் மலை

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அட்டகாசமான அப்டேட்

சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் 'அயலான்' என்ற படத்திலும் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் 'டாக்டர்'

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி தற்போது சுமார் ஒன்பது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு படம் 'வெல்வெட் நகரம்.