விஜயாவின் ஒரிஜினல் முகத்தை பார்த்த ரோகிணி .. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திடீர் திருப்பம்..!

  • IndiaGlitz, [Friday,March 15 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இதுவரை ரோகிணி, விஜயாவின் அன்பான ஒரு பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென அவரது இன்னொரு பக்கத்தை சந்திக்க நேர்ந்த காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணி என்ற கேரக்டர் பல ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் அதை மறைத்து விஜயா வீட்டில் மருமகளாக வந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. அதுமட்டுமின்றி பார்லரை விற்று விட்டு அதில் வேலைக்கு இருப்பதை வீட்டில் உள்ளவர்களிடம் மறைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது அப்பா மலேசியாவில் ஒரு மிகப்பெரிய பணக்காரர் என்றும் பொய் சொல்லி உள்ளார் என்பதும் இவ்வளவு பிராடு வேலைகளை செய்த ரோகிணி, விஜயாவுக்கு அன்பான மருமகளாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் நான் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரோகிணிக்கு அந்த பார்லர் சொந்தமானது இல்லை என்பதை முத்து கண்டுபிடித்து அவரது அப்பா அண்ணாமலை இடம் கூறியிருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்செயலாக தற்போது ரோகிணி கணவர் மனோஜ் பார்லர் ரோகிணிக்கு சொந்தமில்லை என்பதை கண்டுபிடித்து அவர் தனது அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயா ரோகிணியிடம் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டி திட்டுகிறார். இந்த பார்லர் வைப்பதற்கு நான் தான் வீட்டை அடமானம் வைத்து உனக்கு காசு கொடுத்தேன், என்னை கேட்காமல் நீ எப்படி பார்லரை விற்கலாம்? இனிமேல் என்னை கேட்காமல் ஏதாவது செய்தால் தொலைத்து விடுவேன்’ என்று கூறுகிறார். முதல் முறையாக விஜயாவின் இன்னொரு பக்கத்தை பார்த்த ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் தன்னுடைய மற்ற விஷயமெல்லாம் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் ரோகிணியின் ஒவ்வொரு மோசடிகளும் விஜயாவுக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

கவுண்டமணிக்கு சாதகமாக வந்த தீர்ப்பு.. 20 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..!

சொத்து விவகாரம் காரணமாக 20 ஆண்டுகளாக நடிகர் கவுண்டமணி சட்ட போராட்டம் நடத்திய நிலையில் இன்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

கடந்த கால வலிகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்த முந்தைய நடிகை மும்தாஜ்.

எனக்கான சொந்த வேதங்களை புரிந்து கொள்ள நான் எந்த முன் முயற்சியும் எடுக்கவில்லை.மிகவும் பொறுமையாகத்தான் அந்த புரிதல் கிடைத்தது..............

அமிதாப்பச்சன் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. ஒரு மணி நேரத்திற்கு முந்தைய எக்ஸ் பதிவு வைரல்..!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன் அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எக்ஸ் தளத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில்

பெண்கள் ருத்திராட்சம் அணியலாமா? பிரபல ஜோதிடர் முத்துக்குமார்: குல தெய்வம், திருமணம், ருத்திராட்சம் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்!

ஆன்மீக Glitz யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில், பிரபல ஜோதிடர் முத்துக்குமார் அவர்கள், ஜோதிடம் மற்றும் பிரசன்ன ஜோதிடத்தின் ரகசியங்களை பற்றி விரிவாக பேசுகிறார்.

லக்ஷ்மியின் சொத்தை ஏமாற்றிய மோகன் ஷர்மா வயசான காலத்துல இதெல்லாம் எதுக்கு.

நடிகர் மோகன் சர்மா நடிகை லட்சுமி தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டது பற்றி இந்தியாக்ளிட்ஸ் சேனலில் வெளிப்படையாக பேசியிருந்தார்.................