close
Choose your channels

எஸ்.ஏ.சி தொடர்ந்த வழக்கு: விஜய் பட தயாரிப்பாளருக்கு சிறை!

Tuesday, November 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த பண மோசடி வழக்கில் விஜய் படத் தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய், ஸ்ரேயா நடிப்பில் இயக்குனர் பரதன் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அழகிய தமிழ் மகன். இந்த படத்தை சுவர்க சித்ரா அப்பச்சன் என்பவர் தயாரித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன், விஜய்யின் தந்தையிடம் ஒரு கோடி ரூபாய் பெற்று திரும்பி தராமல் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது

இந்த புகார் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த சில வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியான நிலையில் ’பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.