தளபதி விஜய்யின் வித்தியாசமான கேரள நிவாரண நிதியுதவி

  • IndiaGlitz, [Tuesday,August 21 2018]

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையால் அம்மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்தது. கேரள மக்களின் சோகத்தின் துயர் துடைக்க கோலிவுட் திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வந்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நடிகர்கள் பலர் கேரள முதல்வரின் நிவாரண நிதியாக கொடுத்த நிலையில் தளபதி விஜய் வித்தியாசமாக நிதியுதவி செய்துள்ளார். கேரளாவில் உள்ள தனது மன்ற நிர்வாகிகள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்குகளில் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.70 லட்ச ரூபாய் விஜய் நிதியுதவி செய்துள்ளார்.

விஜய்யிடம் இருந்து பெற்ற இந்த நிதியை கேரள விஜய் மன்ற நிர்வாகிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கியோ அல்லது பணமாகவோ கொடுக்கவிருக்கின்றார்கள் என்று கூறப்படுகிறது. அரசு ஒருபுறம் நிவாரண உதவிகளை செய்து கொண்டிருந்தாலும் விஜய்யின் இந்த வித்தியாசமான உதவி, உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.