close
Choose your channels

வெற்றி பெற்ற மறுநாளே மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர்!

Thursday, October 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் மக்கள் பணியை தொடங்கி உள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பொதுவாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வெற்றி பெறும்வரை வேட்பாளர்கள் மக்களிடம் ஓட்டுக்காக கெஞ்சிக் கொண்டு இருப்பார்கள் என்பதும், வெற்றி பெற்ற பிறகு அவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் வெற்றி பெற்ற மறுநாளே பதவியேற்கும் முன்பே தனது மக்கள் பணியை தொடங்கி விட்டார்

வேலூர் மாவட்டம் தாட்டிமானப்பள்ளி என்ற பகுதியில் 6வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் ஒருவர் அந்த பகுதி மக்களின் கோரிக்கையான சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி வைத்துள்ளார். தனது சொந்த செலவில் அவர் இந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதை அடுத்து அவருக்கு அந்த பகுதியினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

இதேபோல் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் 110 கவுன்சிலர்களும் மக்கள் பணியை தொடர்ந்து செய்தால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் அந்த அமைப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.