close
Choose your channels

மீண்டும் தேர்தல் களத்தில் நிர்வாகிகள்: க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்?

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது விரைவில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 169 பேர் போட்டியிட்டதாகவும் அதில் சுமார் 100 பேர் வெற்றி பெற்றதாகவும், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் விஜய்யிடம் வாழ்த்து பெற்றதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் உள்பட பல பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட இருப்பதாகவும் அதற்கு விஜய் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் தரப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வெற்றி பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos