close
Choose your channels

விஜய்யை நேரில் சந்தித்த 115 கவுன்சிலர்கள்! அடுத்தகட்ட அரசியலா?

Monday, October 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டதில் கிராம ஊராட்சி பதவிகளுக்கு மட்டும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 115 பேர் வரை வெற்றி பெற்றிருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த தேர்தலில் மொத்தம் 169 பேர் கிராம ஊராட்சிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் போட்டியிட்டனர் என்பதும், அவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் வாக்குகளை சேகரித்தனர். அந்த அடிப்படையில் 169 பேர் போட்டியிட்டதால் அவர்களில் 115 பேர் வரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வெற்றிபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களை மாலை 5 மணிக்கு நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய பனையூர் அலுவலகத்தில் சந்தித்து அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது.

எனவே இந்த நிகழ்வில் பங்கு பெறுவதற்காக 9 மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த வெற்றிபெற்ற பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சந்திப்பின்போது அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் தன்னுடைய பொறுப்பாளர்களிடம் கருத்துகளை கேட்டறிவார் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.