close
Choose your channels

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகி!

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னிலையில் நிலவரங்களில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது என்பதும் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகித்து வருவதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் போட்டியிட விஜய் மக்கள் மன்றத்தின் தலைமை அனுமதி அளித்திருந்தது என்பதும் இதனை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் கருப்படிதட்டை காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.