சமூக இடைவெளி நிரந்தரமாகிவிடுமோ? பிரபல இயக்குனரின் அச்சம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சமூக இடைவெளி மனிதர்களிடையே நிரந்தரமாகிவிடுமோ என பிரபல இயக்குனர் விஜய் மில்டன் அச்சம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சமூக பாதுகாப்புக்காக நாம்‌ தனித்திருப்பதை அதீதமாகாமல்‌ பார்த்துக்கொள்ள வேண்டும்‌. நம்‌ எண்ணங்களில்‌ பெரும்‌ மாற்றம்‌ ஏற்படுகிறது. தீண்டாமை, குடும்ப பாதுகாப்பு என்ற போர்வை‌ நம்முள்‌ இறங்கிவிட்டது. மனிதர்களை மந்தைகள்‌ போல்‌ கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும் சொந்த ஊர்களுக்கு திரும்ப விடாமல்‌ கொட்டடியில்‌ அடைப்பதையும்‌ சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம்‌ ஏற்கனவே கயிறு கட்டியவன்‌ கட்டாதவன்‌ ம..புடுங்கியவன்‌ பிடுங்காதவன்‌ என வட்டம்போட்டுக் கொண்ட நாம்‌ மேலும்‌ சுருங்கி சுயநலமே பொதுநலம்‌ என்றாகிக் கொண்டிருக்கிறோம்‌.

சகமனிதர்களை ஏன்‌ நண்பர்களை கூட அவநம்பிக்கையோடு தூரத்தில்‌ வைக்க நேரிட்டுவிட்டது நம்‌ பிள்ளைகளின்‌ மனதில்‌ எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது. இந்த ஆரவாரமெல்லாம்‌ அடங்கிய பிறகு என்றேனும்‌ எங்கேனும்‌ சாலை ஓரம்‌ நாம்‌ மயங்கிக்கிடந்தால்‌ அப்படியே விட்டுவிலகி ஒதுங்கிச்செல்வதுதான்‌ சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி என அவர்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறோம்‌. சமூக இடைவெளி என்பது மனதுக்குள்‌ மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம்‌ வருகிறது. இவ்வாறு இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

More News

தமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்

தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு நடிகரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நாசர் முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தொழிலாளர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு அதிரடி

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அன்றாட தொழிலாளி முதல் மாத வருமானம் உள்ளவர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா பரவாமல் தடுக்க துப்பட்டா, கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது சரியா???

கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாதுகாப்புகள் குறித்த எச்சரிக்கைகளும் அதிகரித்துள்ளன

ஈராக்; கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்குக் கூட இடமில்லையா???

ஈராக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது