விஜய் பட வில்லன் நடிகர் அமெரிக்காவில் கைது.. 4 மணி நேரம் விசாரணை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான "கத்தி" திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விஜய் நாயகனாகவும், நீல் நிதீஷ் முகேஷ் வில்லனாகவும் நடித்திருந்தார்.
சமீபத்தில், முகேஷ் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு படப்பிடிப்பு காரணமாக சென்றிருந்தார். அங்கு அவரை காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமாக கருதி கைது செய்தனர். "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என அவரிடம் கேள்வி கேட்டதாகவும், "நான் ஒரு இந்தியன்" என அவர் பாஸ்போர்ட்டை காட்டியிருந்தாலும், அதிகாரிகள் அதை நம்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
"கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் என்னை கைது செய்து விசாரணை செய்தார்கள். ஒரு கட்டத்தில், ‘கூகுளில் என்னை பற்றி தேடிப் பாருங்கள், நான் ஒரு நடிகர், எனது அப்பா, தாத்தா பிரபல பாடகர்கள்’ என்று சொன்ன பிறகுதான், அவர்கள் கூகுளில் தேடி பார்த்து தங்கள் தவறை உணர்ந்து என்னை விடுதலை செய்தார்கள்" என நீல் நிதீஷ் முகேஷ் தெரிவித்தார்.
நீல் நிதீஷ் முகேஷின் தாத்தா பாலிவுட் திரையுலகின் பிரபல பாடகர் என்பதும், அவருடைய தந்தையும் பிரபல பின்னணி பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com