விஜய் சினிமாவை விட்டு போக மாட்டார், தொடர்ந்து நடிப்பார்: மிஷ்கின் கணிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படம் என்றும், அதன் பிறகு அவர் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று வெளியாகிய 'சச்சின்' திரைப்படத்தின் பிரிவியூ ஷோவை நேற்று பார்த்த இயக்குநர் மிஷ்கின், "விஜய் கண்டிப்பாக திரையுலகை விட்டு செல்ல மாட்டார். அவர் தொடர்ந்து நடிப்பார். சினிமாவை ஒரு பக்கமாகவும், அரசியலை இன்னொரு பக்கம் ஆகவும் வைத்து கொண்டு தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
'சச்சின்' திரைப்படத்தின் பிரிவியூ நேற்று வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்தேன் மிஷ்கின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். "இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு கல்லூரி காலத்திற்கு டைம் டிராவல்ஸ் பண்ணியது போல் இருந்தது. நான் சந்தித்த ஆச்சரியமான மனிதர் தாணு அவர்கள் என்னை அழைத்ததால் 'சச்சின்' படம் பார்க்க வந்தேன்" என்றும் தெரிவித்தார்.
"முதல் முறையாக இந்த படத்தை நான் இப்போது தான் பார்க்கிறேன். இவ்வளவு அழகான, ஜாலியான படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. காதலிக்கும் போது வெளிப்படும் குழந்தைத்தனத்தை மிகவும் அழகாக இந்த படத்தில் காட்டியுள்ளனர். கிளைமாக்ஸ் எனக்கு மிகவும் பிடித்தது" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "விஜய்யை மிக அழகாக, அவருடைய கேரியரில் காட்டியது இந்த படமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். விஜய் கலைத்துறையை விட்டு போக மாட்டார் என்றும், தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பார் என்றும் தான் நான் நினைக்கிறேன். அவர் அரசியல் வேலைகளை ஒரு பக்கம் பார்க்கட்டும். சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள விஜய், வருஷத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com