close
Choose your channels

ஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்

Saturday, August 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு காலத்தில் நடிகர் நடிகையர் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் உள்ளனர் என்பதும் சமூக வலைதளங்கள் மூலம் அவர்கள் தங்கள் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் போன்ற பெரிய நடிகர்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து தளபதி விஜய் இன்னும் ஒரு சில நாட்களில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ அவர்களின் மகள் சினேகாவுக்கும், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் என்பவருக்கும் சென்னை சாந்தோம் சர்ச்சில் வரும் 23ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் விஜய் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.