close
Choose your channels

10 ஆண்டுகளில் செய்யாததை நேற்றைய பிறந்த நாளில் செய்த தளபதி விஜய்!

Thursday, June 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தனது பிறந்தநாளின் போது 10 ஆண்டுகளில் செய்யாததை நேற்றைய பிறந்தநாளின்போது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தளபதி விஜய் ஒவ்வொரு பிறந்தநாளின் போது படப்பிடிப்புக்கு செல்வதை தவிர்த்து விடுவார் என்றும் அன்றைய தினம் குடும்பத்துடன் அவர் பிறந்த நாளை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து நேற்று ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் அவர் பிறந்த நாளின்போது கலந்துகொண்டார். தற்போது ’வாரிசு’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் 2ஆம் கட்ட படப்பிடிப்பு முடிவடைய உள்ளதால் நேற்றைய படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் ’வாரிசு’ படத்தின் 45 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.