'தளபதி 65' படத்தின் செட் போடும் பணியை நிறுத்த சொன்ன விஜய்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வெளிநாட்டில் உள்ள பிரமாண்டமான மால் ஒன்றின் செட் போடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திடீரென செட் போடும் பணியை நிறுத்த விஜய் கூறியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் செட் போடும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த பணியை உடனடியாக நிறுத்தும்படியும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு செட் போட்டுக் கொள்ளலாம் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து மால் செட் போடும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு இந்த பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் தகவல் கூறப்படுகிறது

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.,

More News

விஜய்யுடன் டான்ஸ் ஆடும்போது கர்ப்பமாக இருந்தேன்: பிரபல நடிகை பேட்டி

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் போது தான் இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளார் 

'மாநாடு' ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்: தயாரிப்பாளர் அறிவிப்பு!

சிம்பு நடித்து வரும் 'மாநாடு' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அவசரமாக தேவைப்பட்ட ரெம்டெசிவிர் : உடனடியாக உதவிய உள்ளங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட, அதனை அவர் டுவிட்டரில் பதிவு செய்தார்

8 மாதக் கர்ப்பத்துடன் நீருக்கு அடியில் போட்டோ ஷுட் நடத்திய பிரபல நடிகை?

நடிகர் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்’‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சமீரா ரெட்டி.

எம்.பி பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள்...! சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடந்துமுடிந்தது. இதில் ராஜ்சபா எம்,பிக்களாக பதவி வகித்து வந்த பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் போட்டியிட்டனர்.