'தெறி'யின் ஒருவார வசூல் எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,April 21 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. 'தெறி' திரைப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தின் முதல் வார வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'தெறி' திரைப்படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.46 முதல் ரூ.47 கோடி வரை வசூலாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் சென்னையில் மட்டும் சுமார் ரூ.5.53 கோடி வசூலாகியுள்ளது. செங்கல்பட்டு ஏரியாவில் இந்த படம் திரையிடப்பட்டிருந்தால் வசூல் ரூ.50 கோடியை தாண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளிலும் 'தெறி' நல்ல வசூலை பெற்றுள்ளது.

More News

அஜித் கருத்துக்கு ராதிகா ஆதரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்ட மக்களிடம் ஏன் பணம் வசூல் செய்ய வேண்டும் என்ற அஜித்தின் கருத்தை தான் வரவேற்பதாக நடிகை ராதிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்....

தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனாலும், செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக திரையிடப்படவில்லை....

கவுதம் மேனனின் இரண்டு படங்களிலும் ஒரே இசையமைப்பாளர்

செல்வராகவன் இயக்கி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தில் இசையமைப்பதாக இருந்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக யுவன்ஷங்கர்...

நட்சத்திர கிரிக்கெட்: அஜித் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று முடிந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி ரசிகர்களை கவர்ந்ததோ...

'நேரம்' நிவின்பாலி நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம் குறித்த தகவல்

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'நேரம்' படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமான நிவின்பாலி,