close
Choose your channels

ஒரே ஒரு செல்பி: ஸ்தம்பித்த சமூக வலைதளங்கள்

Monday, February 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு நடிகர் ஒரே ஒரு செல்பி எடுத்த செய்தி சமூக வலைத்தளத்தில் ஸ்தம்பிக்கும் அளவிற்கு டிரெண்ட் ஆகியுள்ளது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நேற்று மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். ரசிகர்களின் பேராதரவை கண்டவுடன் அவர் உணர்ச்சிமயமாகி படக்குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது ஏறி அனைவருக்கும் கையசைத்து மட்டுமின்றி ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த செல்பி செய்தி வெளிவராத ஊடகங்களே இல்லை என்று சொல்லலாம். அது மட்டுமின்றி இந்த செய்தி அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகியுள்ளது. இவ்வளவுக்கும் விஜய் எடுத்த செல்பி இன்னும் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியாகவில்லை. அப்படி இருந்தும் ஒரே ஒரு செல்பி குறித்த செய்தி சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்கும் அளவுக்கு டிரெண்ட் ஆகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கையும் இது நிரூபிக்கின்றது என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.