close
Choose your channels

நடிக்க மாட்டேன் என்று விலகிய படத்தில் மீண்டும் இணைகிறாரா விஜய்சேதுபதி?

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஹிட் படம் ஒன்றில் நடிக்க மாட்டேன் என்று விலகிய விஜய் சேதுபதி மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என விலகி விட்டதாகவும் அதன் பிறகு அந்த கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’புஷ்பா’ படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளன. இந்த நிலையில் ’புஷ்பா’ இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் பகத் பாசில் ஆகிய இருவருக்கும் இடையே நேரடி மோதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க படக்குழுவினர் அவரை அணுகியுள்ளதாக தெரிகிறது.

விஜய் சேதுபதியும் ‘புஷ்பா 2’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரியவருகிறது. ஏற்கனவே ‘பேட்ட’, ’மாஸ்டர்’, ’விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லன் நடிப்பில் மிரட்டிய விஜய் சேதுபதி இந்த படத்திலும் வில்லனாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.