இருவருக்குமே இரண்டு வேடங்களா? விஜய்சேதுபதி-டாப்ஸி படம் குறித்த ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Friday,September 18 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை டாப்சி ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த திரைப்படத்தை பழம்பெரும் இயக்குநர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஜய்சேதுபதி, டாப்ஸி ஆகிய இருவருமே இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை பீரியட் மற்றும் சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இரண்டு காலங்களிலும் விஜய்சேதுபதி மற்றும் டாப்சி ஆகிய இருவரும் இரண்டு வேடங்களில் நடித்து உள்ளனர் என்றும் செய்திகள் கசிந்துள்ளது

விஜய் சேதுபதி ஏற்கனவே ’சங்கத்தமிழன்’ என்ற படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதும் டாப்ஸி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் இந்தி படமான ‘சையா ஜியா’ என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்சேதுபதி, டாப்ஸி ஆகிய இருவருமே இரண்டாவது முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம்தான் இந்த படம் என்பது ஒரு ஆச்சரியமான ஒற்றுமை

More News

வெளியானது ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பம்: இணையதளங்களில் வைரல்!

கோலிவுட் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும்

பெரியாருக்கு 5 டன் மணலில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சிற்பம்… அசத்தும் இளைஞர்!!!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு இன்று 142 ஆவது பிறந்தநாள். அதை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பெரியாரின் கருத்துகளை பதிவிட்டும்,

யூடியூபிலும் கலக்குறீங்க: கிரிக்கெட் பிரபலத்திற்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் பிரபலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதோடு யூடியூபிலும் கலக்குறீங்க என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

மதுரையில் போலீஸ் விசாரணைக்குச் சென்ற கல்லூரி மாணவர் மரத்தில் பிணமாக மீட்பு… அடுத்த சாத்தான்குளமா???

சாத்தான்குள காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்த தந்தை மகன் இருவரும் உயிரிழந்த விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது மதுரையில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அடுத்தடுத்து பிரதமருக்கு வாழ்த்து கூறிய ரஜினி-தனுஷ்

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இன்று காலை முதல் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவந்தனர்.