close
Choose your channels

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-அசோக்செல்வன்

Thursday, October 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் ஏற்கனவே ’சூதுகவ்வும்’ மற்றும் ’ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் ’ஓ மை கடவுளே’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜன் அவர்களும் சமீபத்தில் இணைந்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய்சேதுபதியை தான் அணுகியதாகவும் தன்னுடைய கேரக்டர் மற்றும் படத்தின் கதையை கேட்ட விஜய்சேதுபதி உடனே ஒப்புக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்து நடித்துக் கொடுத்ததாகவும் இயக்குனர் அஸ்வத் கூறினார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், அவரது காட்சிகள் சமீபத்தில் மணிமஹாலில் படமாக்கப்பட்டது என்றும் இயக்குனர் மேலும் தெரிவித்தார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாகவும், விரைவில் பாடல் வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாகவும் இயக்குனராக தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.