விஜய்சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' இத்தனை கோடி வசூலா?

  • IndiaGlitz, [Wednesday,October 07 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. இதுவரை ஓடிடியில் வெளியான பெரும்பாலான படங்கள் மக்களின் வரவேற்பை பெறாத நிலையில் முதல் முதலாக விஜய் சேதுபதியின் ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்த படத்திற்கு ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து இந்த படத்தை ஓடிடியில் பணம் செலுத்தி பார்ப்பதற்காக அதிக அளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை 4.7 லட்சம் பேர் ஓடிடியில் பணம் செலுத்தி இந்த படத்தை பார்த்து உள்ளதாகவும் ஒவ்வொருவரும் ரூபாய் 199 செலுத்தி பார்த்து உள்ளதால் இதுவரை கிட்டத்தட்ட ரூபாய் 10 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் இந்த திரைப்படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் வசூலில் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதன்முதலாக ஒரு மாஸ் நடிகரின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அந்த படம் நல்ல வசூலை பெற்று இருப்பது சினிமா தயாரிப்பாளர்கள் இடையே ஓடிடி வசூல் குறித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் வரும் 30ஆம் தேதி வெளியாகும் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படமும் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

வேதியியல் துறைக்கான நோபல் பரிசை கூட்டாகத் தட்டிச் செல்லும் இரு பெண்கள்…

நோபல் பரிசு 2020 க்கான பட்டியலை நோபல் அறக்கட்டளை நேற்று முன்தினம் முதல் வெளியிட்டு வருகிறது.

மலைக் கிராமத்திற்கு மொபைல் டவர்… ஏழைகளின் நாயகன் சோனுசூட்டின் அடுத்த அதிரடி!!!

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரி வகுப்புகள் அனைத்தும் தற்போது வரை ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ் எல்லாம் இனி இப்படித்தான்… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கெட்டுபோன மாமிசம் எனக்கூறிவிட்டு… காதலியை கூறுபோட்டு எரித்த சம்பவம்!!!

துருக்கியில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. அப்படி பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து

சூர்யா வெளியிடும் புத்தம் புது பாடல்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

தான் கம்போஸ் செய்த புதிய பாடல் ஒன்றை நாளை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்