close
Choose your channels

இரண்டே மாதங்களில் முடிவுக்கு வந்த விஜய்சேதுபதியின் படம்!

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஒருசில நடிகர்களின் திரைப்படங்கள் வருடக்கணக்கில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் விஜய்சேதுபதியின் படங்களின் படப்பிடிப்பு தொடங்கிய மின்னல் வேகத்தில் முடிவடைந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' படத்தின் பூஜை போடப்பட்டு அன்றே படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. நேற்று இந்த படத்தின் நிறைவு நாள் படப்பிடிப்பு தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து விரைவில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளன.

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவும் அவருடைய இரண்டு இசை வாரிசுகளான கார்த்திக் ராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர்கள் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.