close
Choose your channels

'நான் எதையும் சீக்கிரம் கத்துக்குவேன்: 'சங்கத்தமிழன்' டிரைலர் 

Friday, September 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’சங்கத்தமிழன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

‘கீழே இவ்வளவு பேர் இருக்கும்போது நீ எப்படி மேலே வந்த? என்று கேட்கின்ற கேள்விக்கு ’அத கீழ இருக்கிறவங்க போய் கேளுடா, என்கிட்ட எதுக்கு கேட்குற’ என்று விஜய்சேதுபதி பதில் கூறுவதோடு இந்த டிரெய்லர் ஆரம்பமாகிறது

எம்ஜி ராமச்சந்திரன் என்ற பெயரில் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பதாக இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. ’யானைக்கு கரும்பு தோட்டம் தேவைப்படும், ஆனால் எறும்புக்கு கரும்புச் சக்கையே போதும் என்ற சூரியின் வசனம் இந்த படம் காமெடியில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் போலவே ராஷிகண்ணாவுடன் ரொமான்ஸ் காட்சிகளும், இந்தப் படத்தை கலர்ஃபுல்லாக கொண்டு சென்றிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் ஒரு நல்ல அரசியல்வாதியாக நாசர் நடித்திருப்பது போன்றும், அவர் விஜய்சேதுபதியை அரசியலுக்கு இழுப்பது போன்ற காட்சியும் இருப்பதால் இந்த படத்தில் அரசியலும் இருக்கும். போலீசாக இருக்கும் விஜய்சேதுபதி அரசியலுக்கு மாறியவுடன் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் இரண்டாம் பகுதியாக இருக்கலாம்.

’சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கின்றது. யார் எதைக் கற்றுக் கொடுத்தாலும் நான் சீக்கிரம் கற்றுக் கொள்வேன்’ என்ற விஜய்சேதுபதியின் வசனம் மாஸ். மொத்தத்தில் இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு மாஸ் படம் தயாராகிவிட்டது என்றே தெரிகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.