close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு கிடைத்த கமல் வகித்த பதவி

Friday, September 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த புரோ கபடி போட்டி இவ்வாண்டு ஆறாவது ஆண்டாக அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற புரோ கபடி போட்டியில் பங்குபெற்ற தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் விளம்பர தூதுவராக இருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு இந்த பதவி நடிகர் விஜய்சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இந்த பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட விஜய்சேதுபதி, 'தமிழர்களின் வீர விளையாட்டான கபடியை மேம்படுத்துவதன் மூலம் தமிழும், தமிழ் மக்களும் மேம்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறும் புரோ கபடி தொடரின் அறிமுகவிழாவில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, 'கபடி விளையாட்டு நம் வரலாற்றோடும், பாரம்பரியத்தோடும், பின்னி பிணைந்த ஒன்று. தமிழா்களுடைய விளையாட்டான கபடியை நாம் தான் மேம்படுத்த வேண்டும். நமது வியைாட்டை மேம்படுத்துவதன் மூலம் தமிழ் மொழி மேம்படும். கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கபடிக்கும் கொடுக்க வேண்டும். இந்த வருட புரோ கபடி சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதுவராக இருந்து இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் பெருமையடைகிறேன் என்று கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் 5 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 6 வரை நடைபெறவிருக்கும் புரோ கபடி சீசன் 6ல், தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.