விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணையும் சமுத்திரக்கனி

  • IndiaGlitz, [Wednesday,July 29 2015]

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபிசிம்ஹா மற்றும் பலர் நடித்த 'சூது கவ்வும்' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி தற்போது இயக்கியுள்ள ஒரு புதிய படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் இன்னொரு முக்கிய நடிகர் நடித்துள்ள தகவல் தற்போது கிடைத்துள்ளது.

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி, சமீபத்தில் 'மாஸ்' படத்தில் வில்லனாக மிரட்டிய நிலையில், இந்த படத்திலும் மீண்டும் வில்லனாக நடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. விஜய் சேதுபதியும், சமுத்திரக்கனியும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தில் பாடல் வெளியீட்டு தேதி உள்பட அனைத்து அறிவிப்புகளும் வெளிவரும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள 'ஆரஞ்சுமிட்டாய்' திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸாகவுள்ளது. விஜய் சேதுபதியுடன் ரமேஷ் திலக், ஜெயப்பிரகாஷ், பாலா, அஷ்ரிதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிஜு விஸ்வநாதன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்தின் இசையமைத்துள்ளார்.

More News

நடிகர் சங்க தேர்தல். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த 15ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விஷால் தரப்பில் இருந்து ஜூலை 15-ந் தேதி...

பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவி

விக்ரம் நடித்த 'தூள்' என்ற படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல' என்ற பாடலில் சிங்கம் போல் கர்ஜித்த பிரபல பாடகி மற்றும் நடிகை பரவை முனியம்மாவை யாரும்...

'புலி' ஆடியோ விழாவில் இரண்டு சூப்பர்ஸ்டார்கள்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் 'வானவில் வட்டமாகுதே' சிங்கிள் டிராக் டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது....

இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டாருக்கு மாறிய ஜி.வி.பிரகாஷ்

பிரபல இளம் இசையமைப்பாளரும், நடிகராகவும் விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது பென்சில், த்ரிஷா இல்லைனா நயன்தாரா...

ராஜஸ்தானில் '10 எண்றதுக்குள்ள' கிளைமாக்ஸ்

விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்...