close
Choose your channels

தமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு

Monday, October 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ’800’ என்ற திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதிக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளலாம் என்று முத்தையா முரளிதரன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்

இந்த அறிக்கைக்கு ’நன்றி வணக்கம்’ என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விஜய் சேதுபதி நேரில் சந்தித்தார். சமீபத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் தாயார் மறைவை அடுத்து விஜய் சேதுபதி ஆறுதல் கூறுவதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. இருப்பினும் ’800’ பட விவகாரம் குறித்து விஜய் சேதுபதி முதல்வரிடம் பேசி இருப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் ‘800’ பட விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய்சேதுபதி, ’நன்றி வணக்கம்’ என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்றும் இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.