ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

விஜய் சேதுபதி நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. அதேபோல் விஜய் சேதுபதி நடித்த ’துக்ளக் தர்பார்’, ‘கடைசி விவசாயி’ மற்றும் நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருக்கும் ’மாமனிதன்’ ஆகிய திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்த மேலும் ஒரு திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய் சேதுபதி, டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் நேரடியாக வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகர் சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கிய இந்தப் படத்தில் ராதிகா, தேவதர்ஷினி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவால் அனாதையான குழந்தைகள்? அதிர்ச்சி தரும் கணக்கெடுப்பு!

கொரோனா பாதிப்பினால் தாய் மற்றும் தந்தை அல்லது தங்களது பாதுகாவலர்களை இழந்து உலகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையாக மாறியுள்ளனர்

ரூ.10 கோடி இழப்பீடு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை வழக்கு!

முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது தமிழ் நடிகை ஒருவர் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூர்யா 40 படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் மினி டீசர்!

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இது சூர்யாவின் 40வது படம்

3 நடிகைகளை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்தாரா ராஜ்குந்த்ரா?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பிரியாமணி கிரிமினல்...அந்த கல்யாணம் செல்லாது....! கணவரின் முதல் மனைவி குற்றச்சாட்டு.....!

முஸ்தபா ராஜ், நடிகை பிரியாமணியின் கல்யாணம் செல்லாது, அது சட்டவிரோதமானது என அவரின் முதல் மனைவி புகார் கொடுத்துள்ளார்.