மலேசியாவில் விஜய் சேதுபதியின் அடுத்த பட பூஜை.. இயக்குனர் இவர் தான்..!

  • IndiaGlitz, [Friday,May 19 2023]

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் அவர் ஏற்கனவே 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை நடந்து உள்ளது.

விஜய் சேதுபதி கடந்த 2018 ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் ’ஒரு நல்ல நாளா பார்த்து கதை சொல்றேன்’ இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கி இருந்த நிலையில் இவர்தான் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று மலேசியாவில் நடந்த நிலையில் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இந்த படத்தில் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி ’மேரி கிறிஸ்மஸ்’ ’காந்தி டாக்ஸ்’, ’மும்பைகார்’ ’ஜவான்’ மற்றும் விடுதலை இரண்டாம் பாகம் ஆகிய ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செட்டில் இருந்த நடிகர் சல்மான் கானுக்கு காயம்… வைரல் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் சல்மான்கான் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது காயம் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு அனுமதி… பழைய மாதிரியே இருக்குமா?

ஆன்லைன் மொபைல் விளையாட்டுகளுள் ஒன்றான பப்ஜிக்கு மத்திய அரசு தடைவிதித்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அழுத படியே நடிகை ரைசா வில்சன்… இன்ஸ்டா புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமா நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ரைசா வில்சன் அழுத படியே இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

பயன்படுத்திய ஆணுறையை பெண்களுக்கு அனுப்பும் சைக்கோ… வலைவீசித் தேடும் போலீஸ்

ஆஸ்திரேலியாவில் மர்மநபர் ஒருவர் பயன்படுத்திய ஆணுறைகளைத் தொடர்ந்து பெண்களுக்கு தபால் மூலம் அனுப்பி வருவதாகப் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது...

டிக்கெட் விற்பனையில் பெரிய முறைகேடு… சிஎஸ்கே நிர்வாகம் மீது வழக்குப் பதிவு!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகளுக்கான டிக்கெட்டுகள்