close
Choose your channels

3 பாகங்களில் தயாராகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: டைட்டில் மாற்றம் என தகவல்!

Wednesday, August 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அனபெல் சுப்பிரமணியம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’அனபெல் சுப்பிரமணியம் என்று இருப்பதை ’அனபெல் சேதுபதி’ என்று மாற்ற படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் உருவாக்க இயக்குனர் திட்டமிட்டு உள்ளதாகவும், அடுத்தடுத்து பாகங்கள் என்பது இந்த படத்தின் கதையுடன் தொடர்ச்சி என்பது மட்டுமின்றி முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் அடுத்தடுத்த பாகங்களிலும் நடிப்பார்கள் என்றும் குறைந்தது மூன்று பாகங்கள் உருவாக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி ஜோடியாக டாப்ஸி நடிக்கும் இந்த திரைப்படத்தை தீபக் சுந்தரராஜன் அவர்கள் இயக்கி வருகிறார் என்பதும், இவர் பிரபல இயக்குனர் சுந்தரராஜனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.