தாமரை வரிகளில் 'ஏஸ்' மெலடி பாடல்.. விஜய் சேதுபதி - ருக்மணி வசந்த் செம்ம கெமிஸ்ட்ரி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ஏஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. தற்போது, இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை தாமரை எழுதியிருக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும், கபில் கபிலன் மற்றும் ஸ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளனர்.
’உருகுதே உருகுதே’ என்று தொடங்கி மிகவும் மென்மையான மெலடி பாடலாக உருவாகியுள்ள இதை முதல் முறை கேட்டவுடன் மனதை உருக வைக்கும் அளவிற்கு உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பாடல் காட்சியில் விஜய் சேதுபதி மற்றும் ருக்மணி வசந்த்தின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருப்பதாகவும், ’96’ படத்திற்கு பின் விஜய் சேதுபதிக்கு ஒரு பக்கா ரொமான்ஸ் கதையாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு பிரித்திவிராஜ், முத்துக்குமார், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஆறுமுக குமார் தயாரித்து, இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கரன் ராவத் ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com