close
Choose your channels

ரஜினியுடன் விருது வாங்கியது எனது அதிர்ஷ்டம்: விஜய்சேதுபதி

Wednesday, October 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

67 வது தேசிய விருதுகள் நேற்று வழங்கப்பட்ட நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் ஒருசில தமிழ் திரை உலக பிரபலங்களுக்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தாணு, பார்த்திபன், தனுஷ், வெற்றிமாறன், விஜய்சேதுபதி, இமான், ரசூல் பூக்குட்டி, நாகவிஷால் ஆகிய தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விருது கிடைத்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ’சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி பேட்டி அளித்தபோது, 67வது தேசிய திரைப்பட விருது விழா வாங்கும்போது ரஜினி சார் அவர்கள் அங்கே இருந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக நான் கருதுகிறேன். 50 ஆண்டுகள் அவர் இந்த திரையுலகில் பணிபுரிந்து வருகிறார்

இந்த தேசிய விருது வழங்கும் விழாவில் எனக்கு மிகவும் பிடித்தது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பேச்சு தான். மிகவும் அருமையாக பேசினார். சினிமா என்பது என்ற பொழுதுபோக்கு மட்டும் அல்ல என்பதை அழகாக கூறினார். எல்லா மொழியும் தேசிய மொழி தான் என்றும் இன்னும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது

மேலும் தியாகராஜன் குமாரராஜா அவர்களுக்கு எனது மிகப்பெரிய நன்றி. இந்த விருது கிடைத்தது அவரால்தான். இந்த விருதை நான் வாங்கினேன் என்று சொல்வதைவிட அவரால் வாங்கினேன் என்று சொல்வதுதான் உண்மை’ என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.