close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'சேதுபதி' படப்பிடிப்பு முடிந்தது

Tuesday, December 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து அவர் நடித்து வரும் அடுத்த படமான 'சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.


முதன்முதலாக விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி 'பீட்சா' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை மையமாக கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படம் ஒரே ஷெட்யூலில் முழுப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் அருண்குமார் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய்சேதுபதி இந்த படத்தின் டப்பிங் பணியில் இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் இசைவெளியீடு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.