விஜய்சேதுபதியின் தமிழ் வெப் தொடர்.. தேசிய விருது பெற்ற இயக்குனருடன் கூட்டணி..!

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த ’பார்சி’ என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி தமிழில் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடர்பான பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகின்றன.

சிறந்த குழந்தைகளுக்கான படம் என்ற தேசிய விருது பெற்ற ’காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் மணிகண்டன் தான் இந்த வெப் தொடரை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்த ’கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படமும் நல்ல வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணையும் இந்த வெப் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் என்பவர் இசையமைக்கிறார். இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘நேரம்’, ‘பிரேமம்’ மற்றும் ‘கோல்ட்’ உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகும்.

More News

அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்; நியூ லுக்கில் செம்ம தலைவா..  புகைப்படத்தை பகிர்ந்த செளந்தர்யா..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அம்பானி வீட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் நியூ லுக்கில் இருக்கும் புகைப்படத்தை அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்

உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்… யார் இந்த அஜய் பங்கா?

அமெரிக்க வாழ் இந்தியரான அஜய் பங்கா என்பவர் உலக வங்கியின் தலைவராகப் போட்டியின்றி தேர்வுசெய்யபட இருக்கிறார்.

சினேகன் வீட்டுக்கு வந்த புது உறவு.. 'துளசி' என பெயர் வைத்த கன்னிகா ரவி..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன் நடிகை கன்னிகா ரவியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தாரா? கைதாகும் நிலையில் டெனாலாட் டிரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது மன்ஹாட்டன் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் கைது

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த அனிருத்-ஹிப்ஹாப் தமிழா ஆதி: செம்ம பாடல் ரிலீஸ்..!

 4 ஆண்டுகளுக்கு பின் அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி இணைந்த பாடல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.