மனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்த பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜை பார்த்து ’மனம் திறந்து சொல்றேன் நீ நல்லா வருவ’ என்று பாராட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் திரையுலக பிரமுகர்களும் அரசியல் வாதிகளும் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். ‘லவ் யூ நல்லா வருவ, அற்புதமான படம், மனசார சொல்றேன், நன்றி’ என மாரி செல்வராஜ்க்கு அவர் வாழ்த்து தெரிவித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய விஜய் சேதுபதியிடம் பாராட்டு பெற்ற மாரி செல்வராஜ் விரைவில் விஜய் சேதுபதி படத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு!

சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதனால் மனஅழுத்தத்தோடு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

10 ரூபாய் டாக்டர் மறைவு....! ஊரே சேர்ந்து செய்த இறுதிச்சடங்கு...!

பழைய வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலன் உடல்நலக்குறைப்பாடு உயிரிழந்தார்.

ஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா? கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வேற லெவலில் மக்களை சென்றடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சி போல் இதுவரை எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியும் புகழ் பெற்றதில்லை

கட்டாய ஓய்வு பெறும் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்...! மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...!

தமிழகத்தில் மாநில தலைமை ஆணையம் 'ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்' பொறுப்பில் உள்ள 9  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை  கட்டாய ஓய்வு பெற பரிந்துரை செய்துள்ளது. 

மிளகாய்ப்பொடி தூவி 100 சவரன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தில் தங்க நகை தயாரித்து விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவரின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.