ரூ.20 கோடி சம்பளத்தை குறைத்தாரா விஜய்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Wednesday,July 15 2020]

தளபதி விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ’தளபதி 65’ திரைப்படம் குறித்து தினந்தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்திற்காக விஜய் தனது சம்பளத்தில் ரூபாய் 20 கோடியை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

‘தளபதி 65’ படத்திற்காக விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருந்ததாகவும் இந்த சம்பளம் ’அண்ணாத்தத’ படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது உள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் விஜய் தனது சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கேட்டு கொண்டதற்கு இணங்க குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகளில் வசூல் குறைவாக இருக்கும் என்பதால், அனைத்து நடிகர்களும் தங்களது சம்பளத்தை தாங்களாகவே முன்வந்து குறைத்து தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையாள திரையுலகில் அனைத்து நடிகர்களும் 50% தங்கள் சம்பளத்தை குறைத்து கொண்டதாகவும் அதே போல் தெலுங்கு துறையிலும் பாலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகர்களும் தங்களது சம்பளத்தை குறைத்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து தயாரிப்பாளரின் சிரமத்தை புரிந்து கொண்ட விஜய் ரூபாய் 20 கோடி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாகவும், ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறியதை விஜய் தரப்பினர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் கைவிடப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தவுடன் கண்டிப்பாக தொடரும் என்றும் தளபதி விஜய்யின் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

முதல்முறையாக மாவட்ட ஆட்சி தலைவருக்கு கொரோனா உறுதி: பெரும் பரபரப்பு

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனா அரசால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது

கொரோனா உயிரிழப்பு: இறுதிச்சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் நிதியுதவி!!! கெத்துக் காட்டும் ஒரு மாநிலம்!!!

ஆந்திர மாநிலத்தில் நேற்று கொரோனா பரவல் தடுப்புக்காக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!!! தமிழக அரசின் புது நடவடிக்கை!!!

தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ இட ஒதுக்கீட்டில் இடம் பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது எப்போது? கராத்தே தியாகராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் அரசியலில் குதிப்பது உறுதி என்றும் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும்

பிளாஸ்மா தானம் குறித்து விஜய்சேதுபதி கூறிய முக்கிய தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்