எந்த தயாரிப்பாளரும் வேண்டாம்.. 'தளபதி 69' படம் குறித்து அதிரடி முடிவெடுத்தாரா விஜய்?

  • IndiaGlitz, [Friday,April 12 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் டிவிவி தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென அந்த நிறுவனம் ’தளபதி 69’ படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் ’தளபதி 69’ படத்தை சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, லைகா உள்ளிட்ட நிறுவனங்களில் ஒன்று தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி தனது கடைசி படமான ’தளபதி 69’ திரைப்படத்தை விஜய்யே தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவார் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் ’தளபதி 69’ திரைப்படத்தை தயாரித்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை இயக்குவது எச் வினோத் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விஜய் திரைப்படங்களை தயாரித்தது இல்லை என்ற நிலையில் முதல்முறையாக தனது கடைசி திரைப்படத்தை தயாரிப்பாரா? அல்லது இந்த படத்தை தயாரிக்க வேறு நிறுவனங்கள் முன் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் ’கோட்’ படத்தின் இறுதி கட்டப்பட படிப்பிற்காக ரஷ்யா சென்றிருக்கும் விஜய் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்புவார் என்றும் சென்னை திரும்பிய பிறகு அவர் தனது தயாரிப்பு நிறுவனம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

More News

முதலமைச்சர் பேரனுடன் காதல்.. புளியங்கொம்பாய் பிடித்த ஸ்ரீதேவி மகள்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் முன்னாள் முதலமைச்சர் பேரனை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.

பிரபல நடிகையுடன் 'குக் வித் கோமாளி' தர்ஷன் திருமணமா? வைரல் புகைப்படம்..

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து இருவருக்கும்

சிம்புவுக்கு கூறிய கதையில் தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா? அஸ்வத் மாரிமுத்து விளக்கம்..!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த கதையில் தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா

சின்னத்திரை நடிகர், பேச்சாளர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகிற்கு மேலும் இழப்பு..

2024 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து திரை உலகில் உள்ள சிலர் அடுத்தடுத்து காலம் ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் லொள்ளு சபா சேஷு மரணம்

தங்கைக்காக வருத்தப்படாத நாளே இல்லை சீமானின் தாயார் பகிர்ந்த உண்மைகள்.

பேச்சில் அதிக ஆர்வம் கொண்டவன்.அவன் இந்த மாதிரியான சமூக அக்கறையோடு மேடையில் ஏறி பேசுவதை கல்லூரி காலத்திலேயே ஆரம்பித்து விட்டான்...