close
Choose your channels

கஸ்தூரி சம்பள பிரச்சனை: விஜய்டிவி நிர்வாகம் விளக்கம்

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கஸ்தூரி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை இன்னும் விஜய் டிவி தரவில்லை என தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது;

நாங்கள் ஒரு பொறுப்பான சேனல் என்பதால் எங்களது ஒப்பந்த விதிமுறைகளின்படி எங்கள் சேனல் நிகழ்ச்சிகளில் பணிபுரியும் அனைவருக்கும் சரியான நேரத்தில் சம்பளம் தருவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரியின் சம்பளம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அவருக்கு செலுத்தப்பட்டாலும், அவருடைய ஜிஎஸ்டி ஆவணங்கள் பொருந்தாததால் அவருடைய சம்பளத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து ஜிஎஸ்டி குறித்த சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை நாங்கள் கேட்டுள்ளோம். அது கிடைத்த பிறகு அவருடைய சம்பளம் செட்டில் செய்யப்படும்.

மேலும் எங்கள் சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்கான சம்பளத்தொகை பில்லை அவர் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பதால் எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை’ என்று விளக்கமளித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos