நான் உங்களுக்கு என்ன செய்தேன்? கண்கலங்கிய விஜய்டிவி பிரியங்கா

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்கா தனது சமூக வலைத்தளத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? நீங்கள் ஏன் இவ்வளவு என் மேல் அன்பு காட்டுகிறீர்கள்? என்று கண்கலங்கி வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் மா.கா.ப ஆனந்த் உடன் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்கா சமீபத்தில் மலேசியா சென்ற போது அவருக்கு அந்நாட்டு மக்கள் அளித்த அன்பு அவரை கண்கலங்க வைத்துள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘மலேசிய மக்கள் காட்டிய அன்பால் நெகிழ்ந்து போனேன். அவர்களுக்கு நான் என்ன செய்தேன்? எதற்காக அவர்கள் என்மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதே தவறு என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் எனக்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தது மலேசிய மக்கள் தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என்னை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடி இருந்தது, என்னை பார்த்ததும் கையசைத்தது, எனக்கு வாழ்த்து தெரிவித்தது ஆகிவற்றை பார்த்து நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். மலேசிய மக்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஷகிலாவுக்கு தடை.. ஷகிலாவின் பதில் என்ன தெரியுமா?

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நடிகை ஷகிலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஷகிலா கூறிய பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

டேஞ்சர் ஜோனில் 4 பேர்: நாளை வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில்

'வணங்கான்' படப்பிடிப்பு மீண்டும் தொடங்க யோகிபாபு காரணமா?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது யோகிபாபுவால் இந்த படத்தின்

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை: பிக்பாஸ் என்ன ஆகும்?

 உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. 

திடீரென பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் கதிரவன். தனலட்சுமி அப்செட்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் மாறிமாறி வழக்குகள் தொடுக்கப்படுவதும், வழக்குகள் தொடர்ந்த மற்றும் தொடுக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள்