close
Choose your channels

நிறைய மனவலி மற்றும் தலைவலி: விஜய் டிவி பிரியங்காவின் வைரல் பதிவு!

Wednesday, September 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தனக்கு நிறைய மனவலி மற்றும் தலைவலி என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரியங்கா என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்காவின் சகோதரர் ரோஹித் மனைவிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது பிரியங்கா பதிவு செய்து வந்தார் என்பதும் அந்த குழந்தையை கையில் ஏந்தியபடி அவர் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் தனக்கு நிறைய மன வலி மற்றும் தலை வலி இருந்ததாகவும் ஆனால் இந்த குழந்தையை பார்த்ததும் கவலை எல்லாம் ஓடிப் போச்சு என்றும் இது தான் என் உலகம் என்றும், இது எனக்கு போதும் என்றும் பதிவு செய்து உள்ளார். மேலும் குழந்தையை மடியில் வைத்தவாறு அவர் பதிவு செய்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பிரியங்காவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அப்படி என்ன பிரியங்காவுக்கு மனவலி என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.