ஆரி குறித்து சர்ச்சையாக பதிவு செய்து நெட்டிசன்களிடம் சிக்கிய விஜய் டிவி பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆரிக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் ஆரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஆரி ரசிகர்களிடம் வசமாக சிக்கி உள்ளதாக தெரிகிறது.

எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விஜய் டிவியின் ஆதரவினால் தான் 70 நாட்களுக்கு மேலாக நிஷாவும், 90 நாட்களுக்கும் மேலாக ஷிவானி மற்றும் ஆஜித்தும் இறுதிப் போட்டியில் ரம்யா, கேபி மற்றும் ரியோ ஆகியோர் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரும்பாலான விஜய் டிவி பிரபலங்கள் தங்களுடைய சேனலை சேர்ந்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக ரியோவுக்கு ஓட்டு போட்டதை பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான ரக்சன், தனது சமூக வலைத்தளத்தில் ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ஆரிக்கு தனியார் வலைதளங்களில் வரும் வாக்குகள் எல்லாம் அதிகாரமற்றது என்றும் ஆரியின் பி.ஆர்.ஓ குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அவை போலியானது என்றும் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவிற்கு ஆரியின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் ரக்சன் இது குறித்து விளக்கம் ஒன்றை கூறியுள்ளார். என்னுடைய முந்தைய பதிவு தவறுதலாக பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் எனக்கு ஒரு சிலர் போன் செய்து சொன்ன பிறகே அதை கவனித்ததாகவும் ஆரி அண்ணன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று எந்தவித உள்நோக்கத்துடனும் அந்த பதிவு செய்யப்படவில்லை என்றும் அவரை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யார் கூறினாலும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

More News

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி: சென்னையில் யூடியூப் சேனல் குழுவினர் கைது!

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து யூடியூப்பில் பதிவு செய்ததாக சென்னையில் யூடியூப் குழுவினர் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மவுனம் கலைத்த மெலானியா… டிரம்புக்கு எதிராக அவர் கொடுத்த முதல் குரல்?

அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாகத் தேர்தல் முடிந்தும் வன்முறை, கலவரங்கள் போன்ற சம்பவம் ஏற்பட்டு நாடு முழுவதும் மக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் பத்து மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பெற்றோர்களுடனான கருத்து கணிப்புகளுக்கு

1,000 பெண்கள் புடைசூழ இருக்கும் சாமியாருக்கு 1,000 ஆண்டுகள் சிறை தண்டனை!!! வைரல் சம்பவம்!!!

துருக்கி நாட்டின் மதத்தலைவர் ஒருவருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் அதிரடியாக 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.

'மாஸ்டர்' லீக் காட்சிகள்: படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இன்று ஒரு சில இணையதளங்களில் 'மாஸ்டர்' படக்காட்சிகள் சில லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது