close
Choose your channels

சித்ராவுடன் டேட்டிங் சென்றேனா? முதல்முறையாக மனம் திறக்கும் சின்னத்திரை பிரபலம்

Saturday, December 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை சித்ரா சமிபத்தில் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை உலகிலேயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதும் சித்ரா உடன் நடித்த நடிகர் நடிகைகளுடன் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் அளித்த பேட்டியில், சித்ரா உடன் விஜய் டிவியில் பணிசெய்யும் ரக்சன் டேட்டிங் சென்றதாகவும் அப்போது தனிமையில் இருக்கும் போது எடுத்த வீடியோவை வைத்து சித்ராவை மிரட்டியதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் சித்ரா தற்கொலைக்கு ஒரு காரணம் என்றும் கூறியிருந்தார்

இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக ரக்சனிடம் இருந்து எந்தவித விளக்கமும் வராமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ரக்சன் இது குறித்து மனம் திறந்து விளக்கமளித்துள்ளார்.

’நானும் சித்ராவும் டேட்டிங் சென்றதாகவும் அவரை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் வெளி வந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. நானே குறைந்த சம்பளத்தில் விஜய் டிவியில் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தி வருகிறேன். சித்ரா எனக்கு நல்ல தோழி தான், ஆனால் அவருடைய மரணத்துக்கு எந்த வகையிலும் நான் காரணம் அல்ல. சித்ராவின் மரணத்திற்கு கூட நான் சென்று இருந்தேன்’ என்று அவர் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.