ஆரம்பித்த சில மாதங்களில் முடிவுக்கு வரும் சீரியல்.. டிஆர்பி பிரச்சனையா?


Send us your feedback to audioarticles@vaarta.com


பொதுவாக, சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் வருட கணக்கில் ஒளிபரப்பாகும். குறிப்பாக ‘பாக்கியலட்சுமி’ தொடர் 5 வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பித்த ஒரு தொடர் இன்னும் ஒரு ஆண்டு கூட நிறைவு பெறாத நிலையில், விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பனி விழும் மலர்வனம்’ என்ற தொடரில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சித்தார்த் குமரன், சில்பா, ராயன் உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில், இந்த சீரியலை சரவணன் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்த சீரியல் ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது முடிவுக்கு வர இருப்பதாகவும், கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்பார்த்த அளவுக்கு டிஆர்பி புள்ளிகள் கிடைக்காததால் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும், இதை தொடர்ந்து ஒரு புதிய சீரியல் விரைவில் விஜய் டிவியில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com