'அனிமல்' இரண்டாம் பாகத்தில் விஜய், விக்ரம் பட நாயகி.. அப்ப ராஷ்மிகா கிடையாதா?

  • IndiaGlitz, [Friday,March 01 2024]

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ’அனிமல்’ திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றாலும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும், ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அனிமல்’ படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பிரபலங்கள் படத்தில் நடித்த தமிழ் நடிகை இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த ரன்பீர் கபூர், அனில் கபூர் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா இரண்டாவது பாகத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ’அனிமல்’ படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க மாளவிகா மோகனன் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கிட்டத்தட்ட அவர் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

’அனிமல் 2’ திரைப்படம் இதுவரை வெளியான பாலிவுட் படங்களின் வசூலை அடித்து நொறுக்கும் என்றும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More News

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நபரான நடிகை நளினி, சமீபத்தில் ஒரு இதயப்பூர்வமான நேர்காணலை வழங்கினார்.

என்னோட 21வயசுக்குள்ளயே நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை நடித்து முடித்தேன்.முக்கிய கதாபாத்திரம் மட்டுமில்லாமல் நகைச்சுவை கதாபாத்திரமும் ஏற்று நடித்தேன்........

போதைப்பொருள் விவகாரம்: சிம்பு பட இயக்குனர் தலைமறைவா?

தமிழகத்தில் போதை பொருள் விவகாரத்தில் ஒரு சில திரை உலக பிரபலங்கள் சிக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சிம்பு படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்.. செல்பி எடுக்க குவிந்த இளம்பெண்கள்..!

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த நிலையில் இளம்பெண்கள் அவருடன் செல்பி எடுக்க குவிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜப்பானில் ராஷ்மிகா மந்தனாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஜப்பானில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள டோக்கியோ சென்ற போது அங்கு விமான நிலையத்தில் ஜப்பான் மக்களின் அன்பை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த

'அயலான்' இயக்குனருக்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் திரை உலகில் இரண்டே படங்கள் இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ரவிக்குமாருக்கு விலைமதிப்பில்லா பரிசு கிடைத்ததை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.