'புலி'யை அடுத்து மீண்டும் சரித்திரக்கதையில் விஜய்: இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,May 28 2020]

தளபதி விஜய் நடித்த ஒரே சரித்திர திரைப்படமான ’புலி’ படத்தை அடுத்து மீண்டும் அவர் ஒரு சரித்திர கதையில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கவிருந்த ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது இயக்குனர் சசிகுமார் இயக்கவுள்ள சரித்திர படம் ஒன்றில் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து சசிகுமார் பேட்டி ஒன்றில் கூறியபோது ’எனக்கு வரலாற்றுக் காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு வரலாற்று கதையை இயக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்கான கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன். அந்த கதையை விஜய்யிடம் கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த படத்தில் நடிக்கவும் அவர் சம்மதித்தார். ஆனால் பட்ஜெட் உள்பட ஒருசில காரணங்களால் இந்த படம் இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும் விரைவில் விஜய்யுடன் சேர்ந்து அந்த வரலாற்று கதையை படமாக்குவேன் என்று சசிகுமார் கூறியுள்ளார்

இதனை அடுத்து மீண்டும் விஜய்யை வரலாற்றுக் திரைப்படம் ஒன்றில் பார்க்க அவரது ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இயக்குனராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார் மிஷ்கின்? ஆச்சரிய புகைப்படங்கள்

இன்றைக்கு பிரபல இயக்குனராக இருக்கும் பலரும் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பதும் உதவி இயக்குநர்களாக இருந்தபோது ஒரு சில படங்களில் நடித்து உள்ளனர்

கொரோனா காலத்திலும் குவிந்த முதலீடுகள்: முதல்வர் பழனிச்சாமிக்கு குவியும் பாராட்டுக்கள்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மத்திய அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் பொருளாதார சிக்கலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

எனக்கு பல நுணுக்கங்களை கற்று கொடுத்தவர் நீங்கள்: பிரபல இயக்குனர் குறித்து அருண்விஜய்

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக இருந்தாலும், சினிமாவின் பின்னணி இருந்தும் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்ப்படம் தான் நடிகர் அருண்விஜய்க்கு

தாய் இறந்தது கூட தெரியாமல் எழுப்பும் பச்சிளங்குழந்தை: வைரலாகும் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநிலம் விட்டு மாநிலத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் நடந்தே சென்றனர்.

கொரோனாவிற்கு அமெரிக்க அதிபர் அளித்த நன்கொடை எவ்வளவு தெரியுமா???

அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.