விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? கே.எஸ்.அழகிரி பதில்!

  • IndiaGlitz, [Friday,February 21 2020]

சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குரல் கொடுத்தனர். குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் இது குறித்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறி வருவதால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை கேஎஸ் அழகிரி அவர்கள் சந்தித்தபோது ’காங்கிரஸ் கட்சியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக் கொள்வோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் வரவேண்டும் என்று நாங்கள் அழைக்கவில்லை 'என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே திமுகவும் விஜய்யை தங்கள் கட்சியில் இழுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் விஜய்க்கு அழைப்பு விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் விஜய் ஏதாவது ஒரு அரசியல் கட்சிகள் சேர்வாரா? அல்லது தனி கட்சி தொடங்குவாரா? அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

பின் தொடர்ந்த ரசிகரை எச்சரித்த சமந்தா: வைரலாகும் வீடியோ

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும்

1947 லிலேயே முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பா.ஜ.க. வின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது

நாடு முழுவதும் இந்தியக் குடியுரிமைச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) க்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீரெட்டி கைது செய்யப்படுவாரா? தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

தெலுங்கு திரை உலகின் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் பலர் மீது பாலியல் புகார் கொடுத்து

எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்: அனுஷ்கா வேதனை

ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அனுஷ்கா  ஷெட்டி. பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்த பின்னர் அவர் உலகப் புகழ் பெற்றார்