கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விஜய்காந்த் செய்த மிகப்பெரிய உதவி

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் திண்டாடி வரும் நிலையில் அரசின் நடவடிக்கைக்கு உதவி செய்யும் வகையில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி செய்து வருகின்றனர்

அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளார். இதன்படி சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார். அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தனது கல்லூரியையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள்‌ எடுத்து வரும்‌ நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்‌ வகையில்‌, ஆண்டாள்‌ அழகர்‌ பொறியியல்‌ கல்லூரியையும்‌, சென்னையில்‌ பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும்‌ தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்‌ என கேட்டு கொள்கிறேன்‌. கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில்‌ வசிக்கும்‌ தேமுதிக நிர்வாகிகள்‌, தொண்டர்கள்‌ அனைவரும்‌ அத்தியாவசியப்‌

பொருட்களான உணவு காய்கறி, உடை, மருந்து, முககவசம்‌ உள்ளிட்ட நிவாரணப்‌ பொருட்களை வழங்க வேண்டும்‌. துப்புரவு பணியாளர்களுக்கும்‌, தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்‌.ஊரடங்கு உத்தரவால்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர்‌ஆட்டோ ஓட்டுனர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ மற்றும்‌ வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்‌ தினக்கூலி தொழிலாளர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ தங்களால்‌ இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்‌.

இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

பிரதமர் உள்பட அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளம் குறைப்பு: 2 ஆண்டுக்கு எம்பி நிதியும் கிடையாது

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊதியமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அமைச்சரவை சற்றுமுன் முடிவு செய்துள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர்,

இனி, கொரோனா நோயாளிகளைப் பயப்படாமல் அழைத்துச் செல்லலாம்!!! மருத்துவர்கள் உருவாக்கிய புதிய வாகனம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கும்போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது.

கொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய பாஜக பிரமுகர்!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு தெருக்களில் வீசப்படும் கொரோனா பிணங்கள்!!!  ஈக்வடார் சந்தித்துவரும் நெருக்கடி!!!

பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத ஈக்வடார் கொரோனா பாதிப்பினால் கடும் நெருக்கடி நிலைமையை சந்தித்துவருகிறது.

ரஜினியுடன் அமிதாப், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி நடித்த படம் இன்று ரிலீஸ்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும்