close
Choose your channels

விஜயகாந்துடன் பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி பரிதாப பலி!

Saturday, October 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சற்றுமுன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் இன்றைய இறுதி நாளில் அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்துக்காக சென்றார்.

நீண்ட இடைவெளிக்கு பின் விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் தோன்றியதால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தன்ர். இந்த நிலையில் விக்கிரவாண்டிக்கு விஜயகாந்த் சென்ற காரின் பின்னால் அவரது கட்சி நிர்வாகிகளும் கார்களில் சென்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் பின்னால் சென்ற கார் ஒன்றில் தேமுதிக மாணவரணி தலைவர் ஜெயசூர்யா என்பவர் தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தால் ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos